Tuesday 20 June 2017

இனியொரு யுகம் செய்வோம்

 இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாளை நல்ல படியாக முடிப்பதுற்குள் போதும் போதும் என்றாகி போகிறது . இன்றைக்கு யார் என்ன குண்டை தூக்கி போட போகிறார்களோ ? என்ன மாற்றம் வர போகிறதோ ? என்ற ஒரு பரபரப்புடனே வாழ வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது .
இன்றைய அரசாங்கமும் , கால சூழ்நிலையும் நம்மை ஒரு பதட்டத்துடனே வைத்துள்ளது . அன்றாட நிலவரம் காண நியூஸ் சேனல்கள் பார்த்த நிலை மாறி அன்றாடம் யார் ஆட்சி நடக்கிறது என அறிய நியூஸ் சேனல்கள் பார்க்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது .
ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம் , மறு பக்கம் ஒரு நாடு!!! ஒரு வரி!!! பிரச்சனை .
ஒரு பக்கம் பிளாஸ்டிக் அரிசி , மறுபக்கம் பதஞ்சலியின் இயற்கை அரிசி .
ஒரு பக்கம் ஆட்சியை தக்க வைக்கும் போராட்டம் , மறுபக்கம் வாழ்க்கையை மீட்டுக்கொள்ளும் ஏழ்மை அவலம்.
ஒரு பக்கம் கங்கையை மீட்டு எடுக்க கோடிக்கணக்கில் நிதி , மறுபக்கம் காவிரி நீரை காண விரும்பி பனித்துப் போன கண்கள் .
ஒரு பக்கம் வல்லரசு பெற போராட்டம் , மறு பக்கம் இறையாண்மையை மதத்தின் பேரில் கூற போட்ட கேவலம் .
ஒரு முரண்பட்ட சமுகத்தில் நாம் நிதம் நிதம் வாழ்வை கழிக்கும் தலையெழுத்து .
200 ஆண்டுகளுக்கு முன்னர் அறியாமையால் அடிமையை மகுடமாக்கினோம் . இன்று எல்லாம் அறிந்தும் சுயலாபத்துக்காக அறியாமையை மகுடமாக்க துணிந்து உள்ளோம்.
மக்கள் நலம் காக்கும் கரங்கள் தன் பதவி காக்கும் போராட்டத்தில் தன் பதவிக்கான அடையாளம் தொலைத்து நிற்கின்றன .
சமிபத்தில் நான் பார்த்த விஷயம் என்னை யோசிக்க வைத்தன .
மாலை 5 மணி இருக்கும் .
நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் . பேருந்து கூட்ட நெரிசலில் நின்று கொண்டிருந்தது . அப்பொழுது தான் அந்த காட்சி என் கண்ணில் பட்டது .
அது ஒரு நடை பாதை . அங்கு 3 குழந்தைகள் . 3 பெண்கள் அமர்ந்து இருந்தனர் . அந்த குழந்தையில் ஒருவனுக்கு 6 வயது இருக்கும் . மீதி குழந்தை இரண்டுக்கும் 2-3 வயது இருக்கும் . அந்த 6 வயது பையன் ஒரு பிளாஸ்டிக் கவரில் டீ வாங்கி வருகிறான் கூடவே இரண்டு டீ கப் .அதை வாங்கிய அந்த பெண்மணி இரண்டு கப்பில் டீயை ஊற்றி ஒன்றை அந்த 6 வயது பையனுக்கும் , மற்ற ஒன்றை தன் அம்மா வயதில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் கொடுத்து , அவர்கள் குடித்த பிறகு அந்த கப்பை கொண்டே மீதம் இருந்த டீயை எடுத்து ஒரு பாதியை அந்த பெண் குடிக்க , மறுபாதியை அந்த பெண் குடிக்கும் சமயத்தில் உறங்கி கொண்டிருந்த ஒரு குழந்தை விழித்து அதை கேட்க அந்த டீயும் கால்வாசி அவளுக்கும் , மீதம் அந்த குழந்தைக்குமாக பகிரப்பட்டது . இன்னும் கொடுமையான நிகழ்வு அந்த குழந்தை இரண்டும் உறங்கிய இடம் , டீ கடைக்கு அருகில் என்பதால் ஈக்களுக்கும் குறைவில்லை ,அவை அந்த குழந்தையை சுவை பார்க்கவும் தவறவில்லை . அதை கண்ட தாய் , அதை விட ஒரு அழுக்கு துணி உண்டா என்று என்னால் விளங்க முடியாத ஒன்றை கொண்டு அதன் முகம் மூடினாள் தன் தாய்மையின் துடிப்பினால் ...    
இந்த நிகழ்வை என்னால் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை . ஏனெனில் சமிபத்தில் என் நண்பனின் அக்காவிற்கு பிரசவத்திற்கு 7௦௦௦௦ கட்டி மகப்பேறு செய்து இருக்கிறார்கள் . எங்கள் வீட்டில் குழந்தை பேற்றை விட , அதற்கு பேர் வைக்கும் நிகழ்விற்கு ஒரு கணிசமான தொகை செலவிடப்படும்.
இப்படி ஒரு கூட்டம் நம்மிடையே இருக்க ,
ஒரு வாழ்வின் மிக குறைந்தபட்ச தேவையான உணவு , உடை , உறைவிடம் இவையே இல்லாமல் போராடும் ஒரு கூட்டம்.
இப்படி மாறுபட்ட சமுகத்தில் நாம் இருந்து கொண்டு என்னால் எப்படி பட்ட வளர்ச்சியை இந்தியா காணும் என எண்ண என் மனம் துணிய மறுக்கிறது .
“நம் நாட்டின் பொருளாதாரம் பெருக அயல் நாட்டுடன் செய்யப்படும் ஒப்பந்தகளையும்  , 103 செயற்கை கோள்களையும்  தாண்டி இந்த சமுகம் இன்னமும் எதையோ ஒன்றை இழந்து தவிப்பதை நாம் ஒத்துகொள்ள தான் வேண்டும் “
இன்றைய அனைத்து கொள்கைகளும் பணக்காரனை இன்னும் பணக்காரனாக ஏழையை இன்னும் ஏழையாக மாற்றுகிறது .
“அரைவயிற்று கஞ்சிக்கு ஒரு சிலர் அல்லாட , உணவு பிடிக்கவில்லை என ஒதுக்கும் நிலையில் தானே நாம் உள்ளோம். விமானத்தில் ஒருவன் பயணிக்க மற்றொருவன் வாழ்வின் லட்சியமே விமானத்தை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்றுள்ளது “
இது புறம் இருக்க இந்த 6 மாதமாக இன்றைய அரசியல் கட்சிகள் மக்களுக்கு என்று என்ன செய்தது என்ற கேள்வியை என்னிலிருந்து என்னால் அகற்ற முடியவில்லை . சமுக பிரச்சனைகளை அரசியலாக்கி , அரசியலை மறந்து போன எதிர்கட்சிகள் . மக்களாட்சியை மறந்து போன மக்கள் .
கதிரமங்கலத்தில் ஒரு கூட்டம் சொந்த ஊரிலே அகதியாக நிலை மாற அழுது கொண்டு இருக்கிறது . எனக்கு மீத்தேன் வேண்டாம் என்ற முழங்கிய மக்கள் கூட்டம் இன்று ஹைட்ரோ கார்போனை தவிர்க்க முடியாமல் வேதனையோடு விதியை நொந்து கொள்கிறது . மது கடைகளை மூட விதித்த உத்தரவுகள் எப்பொழுது அவை இடம் மாற்ற செய்யப்பட வேண்டிய உத்தரவாக மாறியது என்று எனக்கு புரியவில்லை . அரிசியையும் , மாட்டையும் கொண்டு அரசியல் செய்யும் மத்திய அரசு . அதன் உண்மை அறியாமல் மனம் புழுங்கும் சாமானிய மனம்.
பணம் விநியோகித்தல் காரணமாக  தள்ளிவைக்கப் பட்ட தேர்தல்கள் ! ஆனால் பணம் கொடுத்தவர்கள் என்னவோ ஆட்சி பீடத்தை அலங்கரிக்க தவறவில்லையே .! இது தேர்தல் ஆணையம் அறியாததோ ?????
யார் நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று தெரியவில்லை ? ஜனநாயகம் புரியவில்லை ? வல்லரசின் அர்த்தம் விளங்வில்லை ? பதவியையும் , பணத்தையும் பிரதானமாக கொண்ட இடங்களில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது என் முட்டாள் தனமோ ?
மேற்கூறியவை எல்லாம்  நாம் அறியாதவை அல்ல !!! நாம் அறிந்தும் அறியாதது போன்று கடந்து போக துணிந்த நிகழ்வுகள் !!!
இந்நிலை மாற வேண்டும் ....
அந்த மாற்றமாக நாம் இருக்க வேண்டும் ....
உன் சமுகத்தில் நீ எதையும் பெரிதாக செய்ய வேண்டாம்  ...
உன் அறியாமை திரையை முதலில் நீ அகற்று ...
இந்த சமுகத்தில் நீ யார் ? நீ இந்த சமுகத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசி ?
உனக்கே புரியும் ..........
இந்த சமுகம் உன்னையும் , என்னையும் எதிர்பார்த்து நிற்கிறது !!!
அந்த மகான் வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொன்னதை பசுமரத்தாணி போன்று நெஞ்சில் பதித்து கொண்டு !!!

4 comments:

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...