Tuesday 20 June 2017

சிகரத்தை தொட....2

சுகந்தி சென்னையில் உள்ள பிரபல கலை அறிவியல்  கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ..
மலைகிராமத்து அழகு தேவதை ....மனதளவிலும் ...
ஆங்கில வாடையே இல்லாமல் வளர்ந்த அவளுக்கு முதலில் தடுமாறினாலும் ஒரு வருடத்தில் ஆங்கிலம் மெதுவாக அவளுக்கு சரளமாக தொடங்கி இருந்தது ..
அவளின் பழக்கவழக்கம் அங்குள்ளர்வர்களுக்கும் ,அங்குள்ளவர்களின் பழக்கவழக்கம் இவளுக்கும் முதலில் புரியா புதிராக இருந்தாலும் அவளின் இயல்பான பண்பு அவளை மற்றவர்களுடன் நெருக்கமாக்கியது .
மலைவாழ் பெண்ணாக இருப்பினும் அவளின் முயற்சி கண்டு ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு தந்தனர் ...
சென்னையில் கல்லூரியில் வெளி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தாள். ஆரம்பத்தில் அம்மா அப்பாவின் பிரிவு ரொம்ப வருத்தினாலும் தன் இனத்திற்கு குறிப்பாக தன் இன பெண்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் எனும் தன் அப்பாவின் ஆசை அவளுக்கு உறுதி தந்தது.....
அது மட்டும் இல்லை அவளுக்கென்று பிறந்தபோதே பேசி முடிக்கப்பட்ட தன் மாமன் மகன் சின்ராசுவின் ஆசையும் அதுவாக இருந்த சொல்லவா வேண்டும்...
 ஏய் !! சுகந்தி இன்னிக்கு என்னடி புது ட்ரெஸ் போல !! என்றாள் மீனு
ஆமாம் மீனு எங்க தனபாலு மாமா எடுத்து கொடுத்தாங்க !!!
நடத்து நடத்து ......
ஹே உண்ட facebook account இருக்காடி.....
அய்யோயோ அதெல்லாம் எண்ட இல்லபா...
எங்க மாமா ஊருக்கு இங்க காலேஜ் சேத்து விடும் போதே அதெல்லாம் வச்சுக்க கூடாது நு தெளிவா சொல்லிட்டாங்க ....
அடி போடி எந்த காலத்துல இருக்க !!
அதுல எனக்கு ரகுனு ஒரு பையன் பிரண்டு டி...
எப்டி டி தெரியும் அவன உனக்கு ?
அவன தெரியாது ....ஆனா அவன் தன் friend request கொடுத்தான் ..
profile பாத்தேன்.. நல்ல பையனா தெரிஞ்சது அதான் அக்செப்ட் பண்ணிட்டேன்..
அது எப்டி போன் லே நல்ல பையன்னு தெரியும் ..
time line பாத்தனே .....
சரி சரி பாத்து use பண்ணு ........
மீனுவும் சுகந்தியும் ஓரே  கிளாஸ்தான் ......
ரெண்டு பெரும் இணைபிரியா தோழிகள் என்று சொல்லவிட்டாலும் சுகந்தி எல்லோருடனும் நட்புடன் பழகுவது போன்றே இவளுடனும் பழகினாள் ......
மாமா கையெழுத்து போடாதிங்க ......சன்னமாக ஒலித்தது அந்த குரல் .....
தனபாலு பொன்னையாவின் மச்சான் ..... சுகந்தியின் தாய்மாமன் ...
அந்த ஊரில் சொல்லிகொள்ளும் அளவிற்கு 1 ஆம் வகுப்பு படித்திருந்தான் .. மேட்டுப்பட்டி எஸ்டேட்டில் சூப்பர்வைசர்  ஆக வேலை பார்க்கிறான்..
தனபாலு நம்ம புள்ளைய பத்தி என்ன என்னவோ சொல்றங்கயா ...என்னனு கேளுய்ய ...
மாமா விஷயம் இப்போ தான் கேள்விபட்டேன்... எதையும் தெளிவா தெரிஞ்சுக்காம எதுவும் பண்ண வேணம்... சார் நாங்க எங்க பொண்ணு உடம்ப பாக்கணும் ...
முடியாதுனு சொன்னிங்கனா... இந்த மாவட்ட கலெக்டர்ட்ட  மனு கொடுப்போம் ...
சார் இவன் விவகாரம் பிடிச்சவன இருக்கான் ..நமக்கு என்னா சென்னைல போய் பாக்கட்டும் ... என்றான் கான்ஸ்டபில் ..
இல்லையா   இப்டி சொல்ல சொல்லி தான் மேலிடத்து உத்தரவு ....ஒன்னும் தெரியாதவங்கநநு நெனச்சு சரின்னுடனே ...
சரி இரு வறேன்........
அய்யா !! நான் மேட்டுப்பட்டி  இன்ஸ்பெக்டர்  பேசுறேன்.. இங்க சேது போன பொண்ணோட மாமானு ஒருத்தன்  பொண்ணோட உடம்ப காட்டலனா கலெக்டர் த மனு கொடுப்பேன்னு பேசுறான்..
என்ன பண்ணலாம் ...அவன 2 நாளைக்கு உள்ள தூக்கி வை ...மத்தவங்கள மிரட்டி அனுப்பு ..உங்க பொண்ணோட உடம்பு துண்டு துண்டா போயிட்டு அதுனால உடம்ப கொண்டு வர முடியாது  அஸ்தி கிடைக்க செய்றேன்னு சொல்லி அனுப்பிடு.. இங்க நாங்க அந்த பொணம்னு case close பண்ணிடுறோம் ...
ஆனால் அவர்கள் திட்டம் பலிக்கவில்லை ...
அதற்குள் தனபால் காணமல் போய் இருந்தான் .... கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக ......
கலெக்டர் அலுவலகம்....
அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான் தனபால் ..
தன்னையும் , சுகந்தியையும் அறிமுகபடுத்திகொண்டு  நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான் . தன அக்கா மாமாவையும் அவர்களிடம் இருந்து மீட்டுத் தரவும் , சுகந்தி கொலைக்கான காரணம் கண்டுபிடிக்க உதவுமாறு கெஞ்சினான் ..
ஹலோ. நான் நீலகிரி கலெக்டர் பேசுறேன் .என்னப்பா பண்றீங்க ...நீங்க பிடிச்சு வச்சு இருக்க போன்னையவயும் அவங்க வைப்பையும் இங்க கூட்டிட்டு வாங்க...
கலெக்டர் அலுவலகத்தை போலீஸ் ஜீப் நெருங்கும் முன் தகவல் பறந்து இருந்தது சென்னைக்கு ....
பின்னாலே பறந்தது மற்றொரு வாகனம் சுகந்தியின் அம்மா அப்பா தனபாலோடு கலெக்டர் ஆல் அனுப்பப்பட்ட சிறப்பு குழுவோடு .......
இறப்பின் காரணம் அறிய.....




  

No comments:

Post a Comment

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...