Tuesday 20 June 2017

சிகரத்தை தொட....3

துண்டு துண்டாக கிடந்த தன் மகளின் உடல் கண்டு கதறியது பாமர மலைவாசி தம்பதி..
ஐயோ உன்ன இதுக்கா புள்ள இவ்ளோ தூரம் அனுப்பி படிக்க வச்சோம் .. ஆம்பிள புள்ளைய கூட நம்பலையே ... உன்ன சின்ராசுக்கு கட்டி கொடுத்து உன் கூட கடைசி மூச்ச விடலாம்னு நினச்சா .. எங்களுக்கு முன்னாடி நீ மூச்ச விட்டுட்டியே ...
பொன பொட்டலத்தின் முன் கதறியது அந்த தம்பதி...
அழாதிங்க ! என் பேரு சிவராமன் .. கலெக்டர் சார்  என்ன case incharge ஆ நியமிச்சு இருக்காரு...உங்க பொண்ணு சாவுல உள்ள மர்மத்தை கண்டுபிடிக்காம விடமாட்டேன்...
உங்க பொண்ணு உடம்புல நிறைய இடத்துல காயம் இருக்குனு ரிப்போர்ட் வந்து இருக்கு ..அது மட்டும் இல்லாம அவ உடம்புல உள்ள ரேகையும் பதிவு செஞ்சு இருக்கோம் பாப்போம் ..
ரகு சுகந்தியுடன் ஒன்றாக படிக்கும் பெரிய இடத்து பையன். ஆள் பெரிய இடம் என்பதால் முகமும் அதனை அழகாக பரைசாற்றியது. அவன் அப்பா high court வக்கீல் . சென்னையை பூர்வீகமாக கொண்ட குடும்பம் . வீட்டிற்க்கு ஒரே செல்ல வாரிசு என்பதால் செல்லம் அதிகம் ..பிடிவாதமும் கூட...
இவன் தான் மீனுவிர்க்கு friend request அந்த பையன் . மீனுவை பற்றி சொல்லவே இல்லையே ?
மீனு நடுத்தர வர்கத்தை சார்ந்த பெண். சுகந்தி அளவிற்கு அழகானவள் இல்லை என்றாலும் பெண்ணின் இயல்பான ஆழகு உடையவள் . facebook ல் தொடங்கிய இவர்களின் நட்பு நாளடைவில் phone no பரிமாறும் அளவிற்கு முன்னேறியது..
அது நாளடைவில் காதலாக கனிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை ..
இந்த பொண்ணு உடம்புல உள்ள கைரேகைய வச்சு பார்த்தா 18லேந்து 25 வுயசுள்ள யாரோ ஒருத்தன் தான் கொன்னு இருக்கணும் நு தெரிது ..ஆனா இந்த பொண்ணு பசங்க கூடவே பேசாது நு சுத்தி உள்ள எல்லா பொண்ணுங்களும் சொல்லுதுங்க அது மட்டும் இல்லாம இந்த பொண்ணுக்கு அதோட மாமா பையன பொறந்தப்பே பேசி முடிசுட்டோம்னு அவங்க அம்மா அப்பா சொல்றாங்க ..அவ friends எல்லாருமே அவ அவங்க மாமா பையன love பண்ணதா தான் சொல்றாங்க ...அப்போ காதல் விவகாரமாவும் இருக்காது ..புரில்லயே....ஆனா இதுக்கு பின்னாடி ஏதோ சதி இருக்குது ,...அத தெரியனும்னா அந்த கைரேக யாருதுனு தெரியனும் ...அதுக்கு அப்புறம் தான் எல்லா உண்மையும் விளங்கும்.....கணக்கு போட்டது சிவராமனின் போலீஸ் மூளை ...
அவங்க கிளாஸ் பசங்க கைரேகைய சோதிச்சு பாத்த என்ன ....யோசிப்பதோடு இல்லாமல் கமிஷனரிடமும் அனுமதி பெற கிளம்பினான் ...
சிவராமன் எல்லாம் சரி பட் இது ஸ்டுடன்ஸ் மேட்டர் ... டூ சென்செடிவ்... சோ பீ கேர்புல்...
சார், ஐ வில் டேக் கேர் ஆப் இட் .... தாங்க் யூ சார் ...                                                                                              
காலேஜ் வாசல் ....
mam இன்னிக்கு வசந்தியோட கிளாஸ்ல யார்லாம் லீவு ...
இன்னிக்குனு இல்ல ஒரு வாரமா ரகு லீவு ...சிக்கன்பாக்ஸ்னு leave form submit பண்ணி இருக்காங்க ...
கே நான் எல்லாரோட கைரேகைய சோதிக்கலாமா??
தாராளமா சார் ..
ஆனா எதுவுமே பொருந்தல...ஒரு பையன் leave நு சரியாய் எந்த தேதினு சொல்ல முடியுமா ?
சார் அது வந்து .....சுகந்தி இறந்த அடுத்த நாள் ...??????????
அந்த பையன் வீடு அட்ரெஸ் தாங்க .......
சிவராமன் ரகு வீடு வாசலில் ........
இது ரகு வீடா உங்க பையன்ட கொஞ்சம் விஸ்ரிக்கணும் கொஞ்சம் கூப்டுங்க ...
அவன் அவன் வீட்டுல இல்ல ....சிக்கன் பாக்ஸ் நாங்க எங்க போனான் உங்க பையன் ..
அது வந்து ....
ம்மா யாரு .....உள்ளிருந்து ரகுவின் குரல் .......
வாப்பா ரகு ....எங்க சிக்கன் பாக்ஸ் லாம் சரி ஆகிட்டு போல ...
இல்ல இல்ல ..
உன் கைரேகைய கொஞ்சம் செக் பண்ணிகுறோம் ...
சார் இதே கை ரேக தா சார்.....
சொல்லு ...சுகந்தி ஏன் கொன்ன ??
யாரு சுகந்தி ? எனக்குலாம் தெரியாதே????????? ம்மா யார்மா என்ட என்னென்னவோ கேக்குறாங்க ?? ம்மா
தம்பி எல்லாம் தெரிஞ்சுட்டு உண்மைய மட்டும் சொல்லு ...இல்லனா ஜெயில் ல கூட்டிட்டு போய் விசாரிகுற மாறி பண்ணிடாத ?? ஆமா சொல்லிட்டேன் ..
அம்மா அப்பாவ வர சொல்லு...
உங்க அப்பா  மேட்டுப்பட்டி இன்ஸ்பெக்டர்ட பேசுனது வச்சு உங்க அப்பா கால்ல trace பண்ணிட்டோம் ..இனிமே உங்களால எதுவும் பண்ண முடியாது...
அவங்கள அப்றோம் வர சொல்லலாம் ...இப்போ எண்ட சொல்லு ....
சுகந்திய நீ தானே கொன்ன ??
ஆமா ..எதுக்காக கொன்ன ...என்ன love பண்ணி ஏமாத்திட்டா ...என்ன சொல்ற ...
நானும் , சுகந்தியும் facebookl ல தா friend ஆனோம் ...நல்லா பேசுனோம் ...love பண்றேன்னு சொன்னேன் ...அவளும் பண்றேன்னு சொன்னா ...phone லயும் பேசுனோம் ...no யும் பிளாக் பண்ணிட்டா .... திடிர்னு account close பண்ணிட்டா..நேர்ல பொய் கேட்டா ? நான் எப்போ அப்டி பண்ணேன்...நான் facebook லே இல்லனு சொல்லி என்ன ஏமாத்த பாத்த....அதுனால தான் மன்னிப்பு சொல்றேன் சொல்லி அவல வர சொல்லி அவல கொன்னு யார்க்கும் தெரியாம இருக்க ..ரயில்வே ட்ராக் ல வீசிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்...நன் நார்மலா இல்லமா இருக்கறத பாத்துட்டு அப்பா கண்டுபிடிச்சுட்டாங்க....அதுக்கு அப்றோம் காலேஜ் போக வேணாம்னு அம்மா த சொல்லிட்டு..நான் பாத்துக்குறேனு சொல்லிட்டாங்க ..
நேர்ல பேசிக்க மாடிங்களா ??
இப்போதைக்கு வேணாம்னு அவ தா சொல்லி இருந்தா
உங்க அப்பா  மேட்டுப்பட்டி இன்ஸ்பெக்டர்ட பேசுனது வச்சு உங்க அப்பா கால்ல trace பண்ணிட்டோம் ..இனிமே உங்களால எதுவும் பண்ண முடியாது...சரி அவ உனக்கு பண்ண மெசேஜ்லாம் காட்டு....
சிவராம் கான்ஸ்டபிலிடம் இது யாருடைய account யார் use பண்ணதுனு கண்டுபிடிங்க ..அந்த பொண்ணு no வச்சு சிம் யார் நேம் ல இருக்குனு கண்டுபிடிங்க ......
சார் அது மீனுனு இவங்க கிளாஸ்ல படிக்குற ஒரு பொண்ணு பேர்ல இருக்கு....
அப்டியா இது என்ன ??
அந்த காலேசுக்கு phone பண்ணி அந்த பொன்னு வந்து இருக்காளானு விசாரிங்க ....இல்லனா அட்ரஸ் வாங்குங்க
இல்ல சார் .அந்த பொண்ணு காலேஜ் அ நிப்பாட்டிடுச்சாம் ....அந்த பொண்ணு அட்ரெஸ் வாங்கிட்டேன்...
ரகுவும் போலிசும் நிற்ப்பதை கண்ட அவள் சார் நான் எல்லாமே சொல்லிடுறேன் ....
நான் தா ரகுட்ட facebookல பேசுன பொண்ணு ...ஆனா ரகுக்கு சுகந்தி மேல தா ஆசனு தெரிஞ்சுகிட்டு ...சுகந்தி facebook ல இல்லன்னு தெரிஞ்சுகிட்டு அவ பேர்ல account open பண்ணேன்... பின்னாடி உண்மைய சொல்லி நம்மள காதலிக்க சொல்லலாம்நு நினச்சேன்...ஆனா அதுக்குள்ள விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சு என் படிப்ப நிப்பாட்டிட்டு என் போனயும் புடிங்கிட்டாங்க...அதுனால ரகுகிட்ட என எதுவும் சொல்ல முடில்ல..இப்போ த பேப்பர் ல பாத்து எல்லாமும் தெரிஞ்சுது ..நன் த எல்லாத்துக்கும் காரணம் என்ன மன்னிச்சுடுங்க சார்....
நான் உங்களலாம் மன்னிக்க முடியாதுமா ?? உங்களால தங்களோடு எதிர்காலம் நு நினச்ச தன மகளை பறிகொடுத்துட்டு நிக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்லுவிங்க ??
கண்ணும் கண்ணும் பேசிய காதல் போய்..நீங்கலாம்...உங்கள சொல்லி தப்பு இல்ல....வயசு கோளாறு....காதல் தோல்விய தாங்கிக்க மனசு இல்லாம கோல செய்யிற அளவுக்கு வக்கிர புத்தியா வளத்துக்குரிங்க ....படிப்புல 1௦௦/1௦௦ வாங்கி இப்டி வாழ்கைல பெயில் ஆகுரிங்களே..
அந்த பொண்ணு கொலைக்கான உண்மி குற்றவாளிய கண்டுபிடிக்கிறது மட்டும் தா என் வேலை..
உங்களுக்கான தண்டனைய அந்த கண் மூடிய நீதி தேவதை தருவா வாங்க ??
தன் கிராமத்துக்கு விளக்கேற்றே வந்த மலைக்கிளி....தன் மலை சிகரத்தின் மயானத்தை நோக்கி நகரத் தொடங்கி இருந்தது.......



No comments:

Post a Comment

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...